Sunday, June 30, 2024
Home » ஆவடி அருகே பேக்கரி சூறை: 5 வாலிபர்கள் கைது

ஆவடி அருகே பேக்கரி சூறை: 5 வாலிபர்கள் கைது

by kannappan

ஆவடி: ஆவடியை அடுத்த வீராபுரம் சந்தோஷ்மாதா நகரை சேர்ந்தவர் சக்திவேல் (23). இவர் அங்குள்ள புதிய கண்ணியம்மன் நகர் பஸ் நிலையத்தில் பேக்கரி நடத்தி வருகிறார். கடந்த 28ம் தேதி பேக்கரிக்கு 5 வாலிபர்கள் வந்து, கேக் வாங்கி சாப்பிட்டுள்ளனர். பின்னர் பணம் கொடுக்காமல் அங்கிருந்து சென்றுள்ளனர். இதனால் கடை உரிமையாளர், அவர்களை நிறுத்தி பணம் கேட்டபோது அவர்களை மிரட்டிவிட்டு சென்றதாக தெரிகிறது. இந்த நிலையில், ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு அவர்கள் அனைவரும் கடந்த 31ம் தேதி மீண்டும் பேக்கரிக்கு வந்து ஓசிக்கு கேக் கேட்டு சக்திவேலுவிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர். அவர் கொடுக்க மறுத்தததால் ஆத்திரம் அடைந்த அவர்கள், பேக்கரியின் ஷோகேஸ் கண்ணாடிகளை கற்களால் அடித்து நொறுக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர். இதுகுறித்து சக்திவேல் கொடுத்துள்ள புகாரின்படி, ஆவடி டேங்க் பேக்டரி போலீஸ் இன்ஸ்பெக்டர் நடராஜ் தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை  நடத்திவந்தனர். இந்நிலையில், பேக்கரியை சூறையாடியதாக அதே பகுதியை சேர்ந்த சத்யராஜ் (20), குணா(18), விக்னேஷ் (22), வினோத்குமார் (22) மற்றும் கார்த்திக் (22) ஆகியோரை நேற்று மாலை கைது செய்தனர்….

You may also like

Leave a Comment

fifteen − 2 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi