Saturday, July 6, 2024
Home » ஆவடியில் மகளிர் தின விழா பெண் காவலர்களுக்கு கமிஷனர் வாழ்த்து

ஆவடியில் மகளிர் தின விழா பெண் காவலர்களுக்கு கமிஷனர் வாழ்த்து

by kannappan

ஆவடி: ஆவடி மாநகர காவல் ஆணையரகம் சார்பில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. ஆவடி மாநகர காவல் ஆணையரகம் சார்பில் தமிழ்நாடு சிறப்பு காவல் படை, 2ம் அணி வளாகத்தில் மகளிர் தின விழா நேற்று கொண்டாடப்பட்டது. மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் தலைமை தாங்கினார். போக்குவரத்து கூடுதல் காவல் ஆணையர் விஜயகுமாரி, தலைமையகம் மற்றும் நிர்வாக துணை ஆணையர் உமையாள் முன்னிலை வகித்தனர். ஆவடி காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட 25 காவல் நிலையங்களில் உள்ள காவல் அதிகாரிகள், காவலர்கள் பங்கேற்றனர். அவர்களுக்கு ஆணையர் சந்தீப்ராய் ரத்தோர் மகளிர் தின விழா பேட்ஜ், பூச்செண்டு, சாக்லேட் கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.அப்போது அவர் பேசுகையில், ‘பெண் காவலர்கள், தங்களது பணி தொடர்பான குறைகளை உயர் பெண் அதிகாரிகளிடம் தெரிவித்து, அதற்கான தீர்வு பெறலாம்’ என்றார். மேலும், அவர் ஆவடி பகுதியில் உள்ள பெண் ஆட்டோ டிரைவர்களை கவுரவிக்கும் விதமாக, அவர்களுக்கு கேடயம், பூச்செண்டு, சாக்லேட் கொடுத்தும் பாராட்டினார். மகளிர் தின விழாவை முன்னிட்டு பல்வேறு விளையாட்டுப்போட்டிகள் நடந்தன. இதில், சிறப்பாக பங்கேற்ற பெண் காவலர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும், மகளிர் தினத்தை முன்னிட்டு, ஒருநாள் ஆவடி காவல் ஆணையரத்திற்கு உட்பட்ட அனைத்து காவல் நிலையங்கள் பெண் காவல் அதிகாரிகள் தலைமையில் இயங்கியது குறிப்பிடத்தக்கது….

You may also like

Leave a Comment

one × 4 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi