உடன்குடி, ஜூன் 11: ஆழ்வார்திருநகரியில் நாளை(12ம் தேதி) மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடக்கிறது. இதுகுறித்து திருச்செந்தூர் மின்வாரிய விநியோக பொறியாளர் விஜயசங்கரபாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருச்செந்தூர் கோட்ட மாதாந்திர மின்நுகர்வோர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், நாளை (12ம் தேதி) ஆழ்வார்திருநகரி பிரிவு அலுவலகத்தில் தூத்துக்குடி மின்கிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் தலைமையில் நடக்கிறது. இதில் மின்நுகர்வோர்கள் கலந்துகொண்டு அவரவர் கோரிக்கைகளை தெரிவித்து பயன்பெறலாம். இவ்வாறு கூறியுள்ளார்.