ஆளுநர் ரவியை நீக்க கோரி பெரம்பலூரில் மதிமுக கையெழுத்து இயக்கம்

பெரம்பலூர்: ஆளுநர் ரவியை நீக்க கோரி பெரம்பலூரில் நடந்த மதிமுக கையெழுத்து இயக்கத்தை திமுக துணைப்பொதுச் செயலா ளர் ஆ.இராசா.எம்.பி துவக்கி வைத்தார். தமிழக ஆளுநர் ஆர். என். ரவியை பதவி நீக்கம் செய் ய, இந்திய நாட்டின் குடியரசுத் தலைவரை வலியுறு த்தி, பெரம்பலூர் மாவட்ட மதிமுக சார்பில் பெரம்ப லூர் புதுபஸ்டாண்டில் கை யெழுத்து இயக்கம் நேற்று நடைபெற்றது.
மதிமுக உயர்நிலைக்குழு உறுப்பினரான அரியலூர் எம்எல்ஏ சின்னப்பா தலைமையில், பெரம்பலூர் சட்ட மன்ற தொகுதி திமுக எம் எல்ஏ பிரபாகரன், பெரம்ப லூர் சட்டமன்றத் தொகுதி திமுக எம்எல்ஏ பிரபாகரன், மதிமுக அரசியல் ஆலோச னைக் குழு உறுப்பினர்கள் வரதராஜன்,துரைராஜ் முன் னிலையில் இந்தக் கையெழுத்து இயக்கத்தை திமுக துணைப்பொதுச் செயலா ளர் ஆ.இராசா.எம்.பி கலந்து கொண்டு கையெழுத்து இட்டு துவக்கி வைத்து பேசி னார்.

இதில் மதிமுக பெரம்பலூர் மாவட்டச் செய லாளர் ஜெயசீலன், காங்கி ரஸ் கட்சி மாநிலச் செயலா ளர் தமிழ்செல்வன்,மாவட்ட தலைவர் சுரேஷ்,விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் தமிழ் மாணிக் கம், மாநில நிர்வாகி வீரசெ ங்கோலன்,திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் ராஜேந்திரன், மாவட்ட பொ ருளாளர் ரவிச்சந்திரன், பகு ஜன் சமாஜ் கட்சி மாநிலச் செயலாளர் காமராசு, தி.க. நகரத் தலைவர் ஆறுமுகம், மார்க். கம்யூ.கட்சி செல்ல துரை, இ.கம்யூ.கட்சி ஞான சேகரன் மற்றும் மதிமுக மா வட்ட, ஒன்றிய, நகர நிர்வா கிகள் கலந்துகொண்டனர்.

 

Related posts

சுதந்திர தினத்தை முன்னிட்டு மதுபான கடைகளுக்கு நாளை விடுமுறை

திருச்சியில் தொழிலதிபரிடம் நிலமோசடி செய்த 20 பேர் மீது வழக்கு

தங்களது இல்லங்களில் அனைவரும் தேசிய கொடி ஏற்றுங்கள்