ஆளுநர் – முதல்வர் சண்டை போட்டால் என்ன பிரச்சனை வரும் என்பதற்கு தெலங்கானா உதாரணம் : ஆளுநர் தமிழிசை பேச்சு

தெலுங்கானா: ஆளுநர் – முதல்வர் சண்டை போட்டால் என்ன பிரச்சனை வரும் என்பதற்கு தெலங்கானா உதாரணம் என ஆளுநர் பணி அனுபவம் குறித்த நூல் வெளியிட்டு விழாவில் ஆளுநர் தமிழிசை பேசினார். ஆளுநர் – முதல்வர் சுமூக உறவால் என்ன நல்லது நடக்கும் என்பதற்கு புதுச்சேரி உதாரணம் என கூறினார். தெலுங்கானாவில் நான் செல்லும் இடங்களுக்கு ஆட்சியர், எஸ்.பி. கூட வருவதில்லை என தெரிவித்தார். தெலங்கானாவில் முதலமைச்சர் சொன்னால் கையெழுத்து போடுவதற்கு நான் ஒன்றும் ரப்பர் ஸ்டாம்ப் கிடையாது எனவும் பேசினார். நான் தமிழ்நாட்டை குறிப்பிடவில்லை எனவும் தெரிவித்தார். சும்மா டெல்லி சென்றால் அதற்குள் என்னை இடம் மாறுதல் செய்ய போவதாக சொல்கிறார்கள் என கூறினார். அரசியல்வாதியாக இருந்த போதும் விமர்சனம் வருகிறது; ஆளுநராக இருக்கும் போதும் விமர்சனம் வருகிறது என ஆளுநர் தமிழிசை பேசினார். …

Related posts

சிறப்பு புலனாய்வு குழுவினர் முன் ஹத்ராஸ் சம்பவத்தின் ஒருங்கிணைப்பாளர் சரண்: போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க முடிவு

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

குஜராத் மாநிலம் சூரத் அருகே சச்சின் பாலி பகுதியில் 4 மாடி கட்டடம் இடிந்து விழுந்து விபத்து: 15 பேர் காயம்