ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் ஊரக வளர்ச்சி துறை அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

பாடாலூர், செப்.19: பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினர் சரவணன் தலைமை வகித்தார். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (பொது) மாணிக்கம் முன்னிலை வகித்தார்.

ஆர்ப்பாட்டத்தில் சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் சோமதாஸ் என்பவரை பணியிடை நீக்கம் செய்ததையும், மதுரை மாவட்டம் செல்லம்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலர் கீதா என்பவரை பணியிட மாற்றம் செய்ததைக் கண்டித்தும், இவர்கள் மீதான துறைரீதியான நடவடிக்கையை ரத்து செய்யக்கோரியும் கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஆலத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணிபுரியும் அலுவலர்கள் கலந்து கொண்டனர். முடிவில் வட்டார செயலாளர் துரைராஜ் நன்றி கூறினார்.

Related posts

மணல் கடத்திய டிராக்டர் டிப்பர் பறிமுதல்

உளுந்தூர்பேட்டையில் அக். 2ம் தேதி விசிக மது ஒழிப்பு மகளிர் மாநாடு ஆயத்தப் பணி

ஆசிரியரை பீர் பாட்டிலால் தாக்கி கொலை மிரட்டல்