ஆலங்குளம் அருகே பெண் மாயம்

ஆலங்குளம்,ஜூன் 2: ஆலங்குளம் அருகேயுள்ள குறிப்பன்குளம் வடக்கு தெருவை சேர்ந்தவர் குருநாதன் மகன் முருகேசன் (31). கூலித் தொழிலாளி. இவரது மனைவி உமாமகேஸ்வரி (30). இவர்களுக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகிறது. 9 வயதில் ஆண் குழந்தை, 8 வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் கடந்த 23ம் தேதி உமா மகேஸ்வரி வீட்டை விட்டு வெளியே சென்றார். ஆனால், அதன்பிறகு அவர் திரும்பி வரவில்லை என கூறப்படுகிறது. அவரது கணவர் முருகேசன் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து அவர் ஆலங்குளம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிரமாக தேடி வருகின்றனர்.

Related posts

பட்டாசு திரிகள் பறிமுதல்

2 மாதமாக மூடி கிடக்கும் நிறுவனம் சீட்டு பணம் வசூலித்து மோசடி: ஏமாந்தவர்கள் புகார் மனு

பள்ளியில் அடிப்படை வசதி வேண்டும் பெற்றோர் ஆசிரியர் கழகம் மனு