ஆலங்குளத்தில் ரூ.20 லட்சத்தில் இ-சேவை மையம்

ஆலங்குளம், ஜூலை 27:ஆலங்குளம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலக வளாகத்தில் எம்எல்ஏவின் தொகுதி மேம்பாட்டு நிதியின் மூலம் ரூ.21 லட்சம் மதிப்பில் புதிய இ-சேவை மைய கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது. விழாவுக்கு மனோஜ் பாண்டியன் எம்எல்ஏ தலைமை வகித்து புதிய கட்டிடத்துக்கான அடிக்கல்லை நாட்டினார். நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை இளநிலை பொறியாளர் செல்வசுபா, ஓபிஎஸ் அணி மாவட்டச் செயலாளர் வி.கே.கணபதி, பேரூராட்சி கவுன்சிலர் சுபாஷ் சந்திரபோஸ், கணேசன், அருண்குமார், கனகபிரசாத், சதன்ராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related posts

துறையூரில் அரசு உதவி பெறும் பள்ளியில் 326 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்

கண்ணுக்குழி ஊராட்சியில் புதிய பேருந்து வழித்தடம் துவக்கம்

நெல்லில் நவீன ரக தொழில் நுட்ப பயிற்சி