ஆற்றில் சடலமாக மீட்கப்பட்டவர் அடையாளம் தெரிந்தது

 

சின்னமனூர், செப். 1: சின்னமனூர் அருகே மார்க்கையன்கோட்டை-குச்சனூருக்கு இடையே உள்ள முல்லைபெரியாற்றில் நேற்று முன்தினம் ஆண் சடலம் ஒன்று மிதந்தது. இதனை கண்ட பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சின்னமனூர் போலீசார் அந்த உடலை மீட்டு விசாரணை நடத்தினர். விசாரணையில், ஆற்றில் இறந்து கிடந்தவர் சின்னமனூர் அருகே உள்ள புலிக்குத்தி கிழக்கு தெருவை சேர்ந்த கருப்பையா மகன் சுரேஷ் (42) என்பது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சுரேஷ் எப்படி இருந்தார் என்பது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை