ஆறுமுகநேரி சுகாதார நிலையத்தில் தாய்ப்பால் தின விழா

ஆறுமுகநேரி, ஆக. 8: ஆறுமுகநேரி ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் உலக தாய்ப்பால் தினவிழா நடந்தது. மருத்துவ அலுவலர் சீனிவாசன் தலைமை வகித்தார். வட்டார குழந்தைகள் நலத்திட்ட அலுவலர் ஜூலியட் முன்னிலை வகித்தார். விழாவில் கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும் தாய்ப்பால் கொடுப்பதன் முக்கியத்துவம் பற்றி நலக்கல்வி வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் சுகாதார ஆய்வாளர் மகாராஜன், பகுதி சுகாதார செவிலியர் மாலையம்மாள், சித்த மருத்துவர் நந்தினி, மாவட்ட சுகாதார புள்ளியாளர் அமுதா, கிராம சுகாதார செவிலியர்கள், மக்களை தேடி மருத்துவ திட்ட பணியாளர்கள், கர்ப்பிணிகள் உட்பட பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Related posts

கும்பகோணத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

திருக்காட்டுப்பள்ளியில் மாபெரும் பெட்டிஷன் மேளா

அரசு பள்ளி மாணவர்கள் தூய்மை திருவிழா விழிப்புணர்வு பேரணி