ஆர்.கே.பேட்டை அருகே காஸ் சிலிண்டரில் கசிவால் தீ விபத்து : குழந்தைகள் உள்பட 3 பேருக்கு தீக்காயம்

பள்ளிப்பட்டு: ஆர்.கே.பேட்டை அருகே காஸ் சிலிண்டரில் ஏற்பட்ட கசிவால் தீப்பற்றி 2 குழந்தைகள் உள்பட 3 பேருக்கு தீக்காயம் ஏற்பட்டது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.ஆர்.கே.பேட்டை அடுத்த சாணூர் மல்லாவரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை. தனியார் தொழிற்சாலையில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி பரிமளா. தம்பதிக்கு பிரியங்கா(3) மற்றும் ஒன்றரை வயது‌டைய கார்த்திகா என இரு மகள்கள் உள்ளனர்‌. இந்நிலையில், நேற்று காலை கணவன், மனைவி இருவரும் வேலைக்கு சென்று விட்டனர். இரு குழந்தைகளையும் ஏழுமலையின் தாய்  தனம்மாள்(60) பார்த்துக்கொண்டார். தொடர்ந்து, அவர் காலை சமையல் செய்துகொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக சமையல் எரிவாயு சிலிண்டரில் திடீரென கசிவு ஏற்பட்டது. இதனால் திடீரென வீடு முழுவதும் தீப்பற்றியது. பின்னர் தீ மளமளவென பரவி வீட்டில் இருந்த இரு குழந்தைகள் மற்றும் தனம்மாள் ஆகிய 3 பேருக்கும் தீக்காயம் ஏற்பட்டது. உடனடியாக அக்கம்பக்கத்தினர் அங்கு வந்து சமையல் எரிவாயு சிலிண்டர் கசிவை கட்டுப்படுத்தினர். பின்னர் மேலும் தீ பரவாமல் தடுத்தனர். உடனடியாக தீக்காயம் ஏற்பட்டவர்களை சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு தீவிரமாக சிகிச்சை பெற்று வருகின்றனர். சமையல் எரிவாயு சிலிண்டர் கசிவு சம்பவம் தொடர்பாக ஆர்.கே.பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது….

Related posts

அரசு உருவாக்கி உள்ள வேலை வாய்ப்புகளில் முஸ்லிம் சமுதாயத்திற்கு உரிய பிரதிநிதித்துவம்: முதல்வருக்கு ஜவாஹிருல்லா கோரிக்கை

மகனை கிணற்றில் வீசி கொன்று தாய் தற்கொலை: ஒரு மகன் மீட்பு

ஏடிஎம் மெஷினை உடைத்து ரூ.23 லட்சம் கொள்ளை