ஆர்வமுடன் கண்டு ரசித்த கிராம மக்கள் ஊதியம் வழங்கக் கோரி பகுதிநேர ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

 

புதுக்கோட்டை, அக். 9: செப்டம்பர் மாதத்துக்கான ஊதியம் இதுவரை வழங்கப்படாததைக் கண்டித்து புதுக்கோட்டையில் பகுதிநேர ஆசிரியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, பகுதிநேர ஆசிரியர் சங்கத்தின் செயலர் மதிராஜா தலைமை வகித்தார்.
பகுதிநேர ஆசிரியர்கள், அனைவருக்கும் கல்வித் திட்டப் பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு இன்னும் வழங்கப்படாமல் இருக்கும் செப்டம்பர் மாதத்துக்கான ஊதியத்தை விரைவில் வழங்க வேண்டும், அனைத்து தற்காலிக ஆசிரியர்களையும் நிரந்தரப்படுத்துவோம் என்ற தேர்தல் வாக்குறுதியை அரசு நிறைவேற்ற வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
ஆர்ப்பாட்டத்தில், பகுதிநேர ஆசிரியர்கள் சங்க மாவட்டச் செயலர் பழனிச்சாமி, எஸ்எஸ்ஏ திட்ட ஒருங்கிணைப்பாளர் பரிசுத்தம் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

 

Related posts

கல்லூரிகளுக்கு இடையே கபடி போட்டி

கணவரின் உடலை மறு போஸ்ட்மார்டம் கோரிய மனு தள்ளுபடி

திருச்சி அருகே சோகம் வெளிநாடு செல்ல இருந்தவர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு