ஆர்ப்பாட்டம்

தேனி, ஜூலை 16: தேனி நகர பாமக சார்பில், தேனி அல்லிநகரம் அருகே வீரப்ப அய்யனார் கோயில் பகுதியில் உள்ள பனசலாற்றில் ஆர்ப்பாட்டம் நடந்தது. நகர செயலாளர் காஜாமைதீன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் திருப்பதி முன்னிலை வகித்தார். இளைஞர் சங்கத் தலைவர் கபாலி, மீனவர் சங்கத் தலைவர் ஈஸ்வரன், மகளிர் சங்கத் தலைவர் பிரியா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின்போது, பனசலாறு நீரை சிலர் சட்டவிரோதமாக குழாய்கள் அமைத்து திருடுவதை தடுக்க வேண்டும், தேனி நகராட்சி எல்லைக்குள் உள்ள ஊரனி, கண்மாய்களில் இருக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என கோஷங்கள் எழுப்பினர்.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை