ஆர்சிபி அணியை வீழ்த்தியது பஞ்சாப்

மும்பை: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியுடனான ஐபிஎல் லீக் ஆட்டத்தில், பஞ்சாப் கிங்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. டி.ஒய்.பாட்டீல் அரங்கில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் முதலில் பந்துவீச ராயல் சேலஞ்சர்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 205 ரன் குவித்தது. அனுஜ் ராவத் 21 ரன், கேப்டன் டு பிளெஸ்ஸி 88 ரன் (57 பந்து, 3 பவுண்டரி, 7 சிக்சர்) விளாசி பெவிலியன் திரும்பினர். டு பிளெஸ்ஸி 7 ரன் எடுத்திருந்தபோது ஸ்மித் பந்துவீச்சில் கொடுத்த கேட்ச் வாய்ப்பை ஷாருக் கான் கோட்டைவிட்டது குறிப்பிடத்தக்கது.விராத் கோஹ்லி 41 ரன் (29 பந்து, 1 பவுண்டரி, 2 சிக்சர்), தினேஷ் கார்த்திக் 32 ரன்னுடன் (14 பந்து, 3 பவுண்டரி, 3 சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தனர். அடுத்து களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணி 19 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 208 ரன் எடுத்து, 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை வசப்படுத்தியது. அதிகபட்சமாக தவான், ராஜபக்‌ஷே தலா 43 ரன் விளாசினார். மயங்க் அகர்வால் 32 ரன், ஸ்மித் 25 ரன் எடுத்தனர். ஆர்சிபி பந்துவீச்சில் முகமது சிராஜ் 2 விக்கெட் வீழ்த்தினார். பஞ்சாப் அணி 2 புள்ளிகளை தட்டிச் சென்றது….

Related posts

நாங்கள் சிறந்த கிரிக்கெட்டை ஆடவில்லை: இந்திய அணி கேப்டன் கவுர் விரக்தி

கரீபியன் லீக் டி20 தொடர்: பார்படாஸை வீழ்த்தி பைனலுக்குள் நுழைந்தது கயானா

குவாலியரில் நாளை வங்கதேசத்துடன் முதல் டி20 போட்டி: இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர்களாக அபிஷேக்சர்மா-சஞ்சுசாம்சன் களமிறங்க வாய்ப்பு