ஆரம்ப சுகாதார நிலையம் தரவரிசையில் முதலிடம் தஞ்சாவூரில் புத்தகத் திருவிழா

தஞ்சாவூர், ஜூலை 3: தஞ்சாவூர் புத்தகத் திருவிழா மாநகராட்சி அரண்மனை வளாகத்தில் நடக்கிறது.
தஞ்சாவூர் புத்தகத் திருவிழா மாநகராட்சி அரண்மனை வளாகத்தில் வரும் ஜூலை 19ம் தேதி முதல் 29ம் தேதி வரை 11 நாட்கள் நடைபெற உள்ளது. 7வது புத்தகத் திருவிழாவை முன்னிட்டு, இவ்விழாவிற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் தீபக் ஜேக்கப் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அரண்மனை வளாக மைதானத்தில் புத்தகத் திருவிழாவிற்கான அரங்குகள் அமைத்தல், அடிப்படை வசதிகள் உள்ளிட்ட அனைத்து முன்னேற்பாடு பணிகள் குறித்து நேரில் பார்வையிட்டர். பின்னர், அரண்மனை வளாகம் கலைக் கூடத்தில் மேம்பாட்டுப் பணிகள் குறித்தும், சரஸ்வதி மகால் நூலகத்தில் மேற்கொள்ள வேண்டிய பணிகளையும் பார்வையிட்டார்கள். பின்னர், சத்திரம் நிர்வாகத்திலுள்ள அரசர் மேல்நிலைப் பள்ளியிலும், திருவையாறு அரசர் கலைக் கல்லூரியிலும் மேம்பாட்டுப் பணிகள் குறித்து ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன், உதவி ஆட்சியர் (பயிற்சி) உத்கர்ஷ்குமார், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பாலகணேஷ், வட்டாட்சியர்கள் அருள்ராஜ் (தஞ்சாவூர்), தர்மராஜ் (திருவையாறு) மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related posts

தமிழ்நாட்டை முன்னோடி மாநிலமாக மாற்ற இளைஞர்கள், தொழில் முனைவோர் பால் உற்பத்தியில் ஈடுபட வேண்டும்: பால் வளத்துறை அழைப்பு

புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து 10 ஆயிரம் போலீசாருக்கு பயிற்சி: கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் தகவல்

மெட்ரோ ரயில் பணி காரணமாக பெரம்பூர் மார்க்கெட் அருகே 2 நாள் போக்குவரத்து மாற்றம்