ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க மக்கள் கோரிக்கை

 

ஆர்.எஸ்.மங்கலம், ஆக.1: ஆர்.எஸ்.மங்கலம் அருகே உள்ள கடலூர் ஊராட்சியில் உப்பூர், மோர்ப்பண்ணை, நாகனேந்தல், காவனூர், அத்தானூர், அடந்தனார்கோட்டை, ஊரணங்குடி, வெட்டுக்குளம், சித்தூர்வாடி உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. இப்பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இல்லை. இதனால் இப்பகுதி பொதுமக்கள் மருத்துவ வசதி கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

குழந்தைகள் முதல் பெரியவர்கள், கர்ப்பிணி பெண்கள் என அனைவரும் முதலுதவி சிகிச்சைக்கு ஆர்.எஸ்.மங்கலம் அல்லது ராமநாதபுரம் மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. மேலும் கிழக்கு கடற்கரை சாலை பகுதிகளில் நடைபெறும் சாலை விபத்தில் சிக்கியவர்களை கூட அவசர கால சிகிச்சைக்கு ராமநாதபுரம் செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது. எனவே இப்பகுதி மக்களின் நலன் கருதி உப்பூர் பகுதியில் ஒரு அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related posts

ஆசிரியர்கள் கலந்தாய்வுக்கு எதிராக நடத்தும் போராட்டத்தில் பங்கேற்க மாட்டோம் பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு அறிவிப்பு

கஞ்சா விற்றவர் கைது

முப்பெரும் சட்டங்களை அமல்படுத்த எதிர்ப்பு திருச்சியில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்