ஆய்வுக்கூட கட்டுமான பணி துவக்கம்

 

தொண்டாமுத்தூர், செப்.11: கோவை அருகே சர்க்கார் சாமகுளம் பேரூராட்சி கோவில்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ரூ.65.95 லட்சத்தில் அறிவியல் ஆய்வுக்கூடம் கட்டுவதற்காக பூமி பூஜை நடந்தது. இதில் கோவை எம்பி கணபதி ராஜ்குமார், கோவை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தொண்டாமுத்தூர் அ.ரவி ஆகியோர் பணிகளை துவக்கி வைத்தனர்.

உடன் மாவட்ட கல்வி அலுவலர் பரமசிவம், சர்க்கார் சாமகுளம் ஒன்றிய செயலாளர் சுரேஷ் குமார், நகர செயலாளர் சுரேந்திரன், பேரூராட்சி தலைவர் கோமளவல்லி கந்தசாமி, துணை தலைவர் மணி (எ) விஜயகுமார், மாவட்ட துணை செயலாளர் அசோக் பாபு, தலைமைச் செயற்குழு உறுப்பினர் சுப்ரமணியன், பேரூராட்சி செயல் அலுவலர் பார்த்திபன் மற்றும் மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Related posts

கும்பகோணத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

திருக்காட்டுப்பள்ளியில் மாபெரும் பெட்டிஷன் மேளா

அரசு பள்ளி மாணவர்கள் தூய்மை திருவிழா விழிப்புணர்வு பேரணி