Sunday, July 7, 2024
Home » ஆய்வுக்காக அதிகாரிகள் சென்ற படகை கவிழ்க்க முயற்சி செய்த மீனவர்கள்: நடுக்கடலில் பரபரப்பு

ஆய்வுக்காக அதிகாரிகள் சென்ற படகை கவிழ்க்க முயற்சி செய்த மீனவர்கள்: நடுக்கடலில் பரபரப்பு

by kannappan

கடலூர்: கடலூர் மாவட்டத்தில் சுருக்குமடி வலை பயன்படுத்த தடை விதிக்கப்படுள்ளது. தடையை மீறி பல மீனவர்கள் சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன் பிடித்து வருகின்றனர். இதனை தடுக்க மாவட்ட நிர்வாகமும் மீன்வளத்துறை அதிகாரிகளும் பல கட்ட முயற்சிகளை எடுத்து வருவதுடன், சுருக்குமடி வலையை பயன்படுத்தும் மீனவர்களுக்கு எச்சரிக்கை நோட்டிஸ் வழங்கப்பட்டு, படகுகள் மற்றும் வலைகள் பறிமுதல் செய்யப்பட்டு வந்தனர். இந்தநிலையில் தற்போது இன்று கடலூர் மாவட்ட மீன்வளத்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்கள் நடு கடலில் மீனர்வகள் சுருக்குமடி வலையினை பயன்படுத்துகிறார்களா? என ஆய்வு மேற்கொண்டர். அப்போது 20-க்கு மேற்பபட்ட சுருக்குமடி வலையினை பயன்படுத்தி மீன்பிடித்த மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுத்தனர் மீன்பிடித்து பைபர் படகில் வைத்ததிருந்த படகை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.  அப்போது 10-க்கு மேற்ப்பட்ட படகுகளில் மீனவர்கள் ஒன்று சேர்நது அதிகாரிகள் சென்ற படகை ராடரச்ச அலைகளை உருவாக்கி கடலில் கவிழ்க்க முயற்சி செய்துள்ளனர். அலையில் சிக்கய அதிகாரிகள் ஒருகட்டத்தில் பின்வாங்கி கரை திரும்பினர். தற்போது காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்….

You may also like

Leave a Comment

three + 16 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi