ஆயுதப்படை ஏட்டுக்கள் 20 பேர் 3 ஸ்டேஷன்களுக்கு இடமாற்றம்

சேலம், செப்.30: சேலம் மாவட்ட ஆயுதப்படை ஏட்டுகள் 20 பேரை 3 ஸ்டேஷன்களுக்கு இடமாற்றம் செய்து, எஸ்பி உத்தரவிட்டுள்ளார். சேலம் மாவட்ட காவல்துறையில் தீவட்டிப்பட்டி, மகுடஞ்சாவடி, தலைவாசல் ஆகிய காவல்நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் குற்றங்களை தடுக்க கூடுதல் போலீசாரை நியமிக்க எஸ்பி கௌதம்கோயல் முடிவு செய்தார்.

அதன்படி, சேலம் மாவட்ட ஆயுதப்படையில் பணியாற்றி வந்த ஏட்டுக்கள் 20 பேரை, அந்த 3 போலீஸ் ஸ்டேஷன்களுக்கும் இடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார். தீவட்டிப்பட்டி உள்பட 3 போலீஸ் ஸ்டேஷன்களும் மாவட்ட எல்லை பகுதியில் உள்ள ஸ்டேஷன்களாக இருப்பதால், வாகன சோதனையை தீவிரப்படுத்தவும், குற்றதடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காகவும், கூடுதல் போலீசாரை நியமித்திருப்பதாக போலீஸ் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Related posts

15 ஆண்டுகளை கடந்த அரசு வாகனங்கள் பதிவுச்சான்று புதுப்பிப்பு ஓராண்டு நீட்டிப்பு தமிழக அரசு உத்தரவு

ஒருமுறை பயன்படுத்திய 76 ஆயிரம் லிட்டர் சமையல் எண்ணெய் பயோ டீசலாக மாற்றம் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தகவல்

பெண் டாக்டரிடம் ₹1 லட்சம் மோசடி பேர்ணாம்பட்டு போலீஸ் நிலையத்தில் புகார் பார்சலில் தடை செய்யப்பட்டுள்ள பொருள் அனுப்பியதாக கூறி