ஆம்புலன்சில் பெண்ணுக்கு பிரசவம்

 

பெ.நா.பாளையம், மே 10: கோவை துடியலூர் அடுத்துள்ள தொப்பம்பட்டி பகுதியை சேர்ந்தவர் நாகராஜ். இவரது மனைவி அனுசுயா (21). நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு நேற்று காலை வீட்டில் இருந்த போது பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக, சாய்பாபா காலனி

இருந்து வந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வீட்டில் சென்று பார்த்த போது குழந்தையின் தலை வெளியே வந்தது. இதையடுத்து, ஆம்புலன்ஸ் மருத்துவ நிபுணர் தமிழழகன், பைலட் சக்தி குமார் உதவியுடன் பிரசவம் பார்த்தனர். அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. இதையடுத்து துடியலூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக தாய், சேய் இருவரையும் சேர்த்தனர். அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் இருவரும் நலமுடன் இருப்பதாக தெரிவித்தனர். அவசரம் கருதி பிரசவம் பார்த்த ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு மக்களின் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

Related posts

சிவகாசி கண்மாய் கரையில் நடைமேடை பணிகள் தீவிரம்

நாட்டாண்மையை தாக்க முயற்சி: நள்ளிரவில் கிராமத்தினர் சாலை மறியல்

நாளைய மின்தடை