Friday, July 5, 2024
Home » ஆபாச படம் தயாரித்து விற்ற புகாரில் கைது செய்யப்பட்டுள்ள எனது கணவர் குற்றமற்றவர் : ஷில்பா ஷெட்டி வாக்குமூலம்

ஆபாச படம் தயாரித்து விற்ற புகாரில் கைது செய்யப்பட்டுள்ள எனது கணவர் குற்றமற்றவர் : ஷில்பா ஷெட்டி வாக்குமூலம்

by kannappan

மும்பை : ஆபாச படம் தயாரித்து விற்ற புகாரில் கைது செய்யப்பட்டுள்ள ராஜ் குந்த்ரா குற்றமற்றவர் என்று அவரது மனைவியும் நடிகையுமான ஷில்பா ஷெட்டி தெரிவித்துள்ளார். ராஜ் குந்த்ரா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் நிலையில், நடிகை ஷில்பா ஷெட்டியிடம் மும்பை குற்றப்பிரிவு காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது ஆபாச படத் தயாரிப்பில் தொடர்பு உள்ளதா என்பது குறித்து அவரிடம் சரமாரியாக கேள்விகள் எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த ஷில்பா ஷெட்டி தனக்கு மட்டுமல்ல தனது கணவர் ராஜ்குந்த்ராவுக்கும் ஆபாச படத் தயாரிப்பில் தொடர்பு இல்லை என்று கூறினார். ஹாட் ஷாட்ஸ் ஆபாச செயலியின் உள்ளடக்கங்கள் குறித்த விவரங்கள் ஏதும் தனக்கு தெரியாது என்றும் அவர் குறிப்பிட்டார். லண்டனில் வசிக்கும் தேடப்படும் குற்றவாளியும் ராஜ் குந்த்ராவின் உறவினருமான பிரதீப் பக்ஷி என்பவர் தான் ஹாட் ஷாட்ஸ் செயலியை நிர்வகித்து வந்ததாகவும் மும்பை காவல்துறையில் ஷில்பா ஷெட்டி வாக்குமூலம் அளித்துள்ளார்.  …

You may also like

Leave a Comment

six − 1 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi