ஆபாச படங்களை வெளியிடுவதாக சிறுமியை மிரட்டி பலாத்காரம்: வாலிபர் கைது

சென்னை: அடையாறு பகுதியை சேர்ந்த பார்வதி (பெயர் மாற்றப்பட்டுள்ளது, அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில், ‘‘தனது 17 வயது மகளுடன், வாலிபர் ஒருவர் சமூக வலைதளம் மூலம் நட்பாக பழகி உள்ளார். பின்னர், இருவரும் வெளியிடங்களுக்கு சென்று நெருக்கமாக புகைப்படங்கள் எடுத்துள்ளனர். இந்நிலையில், எனது மகளை தொடர்புகொண்ட அந்த வாலிபர், ‘‘உனது ஆபாச படம் என்னிடம் உள்ளது. அதை சமூக வலைதளத்தில் வெளியிடாமல் இருக்க வேண்டும் என்றால், என்னுடன் வெளியில் வர வேண்டும்,’’ என மிரட்டியுள்ளார். இதற்கு பயந்து அவருடன் வெளியில் சென்ற எனது மகளை, தங்கும் விடுதிக்கு அழைத்து சென்று பலாத்காரம் செய்துள்ளார். அதன்படி பலமுறை மிரட்டி பலாத்காரம் செய்துள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என தெரிவித்து இருந்தார். போலீசார் விசாரணையில், ராஜா அண்ணாமலைபுரம், கே.வி.பி.கார்டன் பகுதியை சேர்ந்த ஆகாஷ் (23), சிறுமியை மிரட்டி பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை  போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். …

Related posts

அனைத்து வகைகளிலும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்:டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே

தண்டையார்பேட்டை வினோபா நகரில் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர் கைது: போலீசார் தீவிர விசாரணை