சென்னை: ஆன்லைன் ரம்மிக்கு தடை விதிக்க சட்டம் இயற்றப்படும் என்ற முதல்வரின் அறிவிப்புக்கு விஜயகாந்த் வரவேற்பு தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கை: தற்கொலை எதற்கும் தீர்வாகாது என்பதை இன்றைய இளைஞர்களும், பெண்களும் புரிந்து கொள்ள வேண்டும். பல குடும்பங்கள் சீரழிவுக்கு காரணமாக இருந்த லாட்டரி சீட்டு விற்பனைக்கு தடை விதித்ததை போல், ஆன்லைன் ரம்மி விளையாட்டிற்கும் தமிழக அரசு உடனடியாக தடை விதிக்க வேண்டும். இதற்கிடையே ஆன்லைன் ரம்மிக்கு தடை விதிக்க சட்டம் இயற்றுவது குறித்து பரிந்துரைக்க ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் குழு ஒன்றை அமைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருப்பதை வரவேற்கிறேன். …