ஆன்லைன் மூலம் இரட்டிப்பு பணம் தருவதாக மோசடி செய்தவர் கைது

தென்காசி, மார்ச் 2: தென்காசி அடுத்த அச்சன்புதுரை சேர்ந்த ஒருவரிடம் ஆன்லைன் மூலம் ஒரு லட்ச ரூபாய் பணம் தந்தால் ஒரு மாதத்தில் 2 லட்சம் ரூபாய் தருவதாக கூறி ஏமாற்றிய சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் தாலுகா பூ டீவண்டி கிராமத்தை சேர்ந்த கூல் சாமி மகன் செல்வகுமார் (30) என்பவரை தென்காசி சைபர் கிரைம் ஏடிஎஸ்பி தன்ராஜ் கணேசன், இன்ஸ்பெக்டர் வசந்தி, சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் தனசேகரன், காவலர்கள் கருப்பசாமி, வசந்த், முப்புடாதி, வசந்தகுமார், மாரியம்மாள், ராமலட்சுமி ஆகியோர் அடங்கிய குழுவினர் கைது செய்தனர்.

Related posts

பல்கலைக்கழக நிர்வாகம் தகவல் வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில்

முன்னாள் துணை கலெக்டர் மயங்கி விழுந்து சாவு வேலூர் கலெக்டர் அலுவலகத்தில்

3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணியாற்றினால் இடமாற்றம் பட்டியல் தயாரிக்க உத்தரவு பள்ளிக்கல்வித்துறையில்