செய்முறை: அவலை ஐந்து நிமிடங்கள் ஊற வைக்கவும். பிறகு களைந்து நீரை வடியவிடவும். வாணலியில் எண்ணெய்விட்டுச் சூடாக்கி கடுகு, கறிவேப்பிலை, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, முந்திரிப்பருப்பு, வேர்க்கடலை தாளிக்கவும். இத்துடன் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி, ஊறவைத்த அவல், மஞ்சள்தூள், உப்பு, தேங்காய்த்துருவல் சேர்த்துக் கிளறி, நறுக்கிய கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும்….