நெல்லூர்: ஆந்திர வனப்பகுதியில் காணாமல் போன 3 வயது சிறுவனை ட்ரோன் கேமரா மூலம் வனத்துறையினர் தேடி வருகின்றனர். ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் உய்யலப்பள்ளி கிராமத்தை சேர்ந்த தம்பதி பூஞ்சையா – வரலட்சுமி. பூஞ்சையா ஆடுகளை மேய்க்க வனப்பகுதிக்குள் சென்றார். 3 வயது மகன் சஞ்சுவும் பின்தொடர்ந்தான். சஞ்சு வீடு திரும்பி விடுவான் என்ற நம்பிக்கையில் வனப்பகுதிக்கு ஆடு மேய்க்க சென்றார் பூஞ்சையா. மாலையில் வீடு திரும்பியபோது தான் தன்னை தொடர்ந்து வந்த சஞ்சு காணாமல் போனது தெரியவந்தது….