ஆந்திராவில் இருந்து தமிழகத்திற்கு குட்கா கடத்திய தம்பதி உட்பட 4 பேர் கைது

ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை அருகே ஆந்திர மாநிலத்தில் இருந்து 2 மோட்டார் பைக்குகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை கடத்தி வருவதாக ஊத்துக்கோட்டை டிஎஸ்பி. கணேஷ்குமாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் ஊத்துக்கோட்டை சப் – இன்ஸ்பெக்டர்கள் விக்னேஷ்வர், பூபாலன், சத்திய நாராயணன் மற்றும் ஏட்டுகள் ராமராஜ், சங்கர், பன்னீர் ஆகியோர் தமிழக – ஆந்திரா எல்லையான ஊத்துக்கோட்டை சோதனை சாவடியில் வாகன சோதனை செய்தனர். அப்போது ஆந்திர மாநில பகுதியில் இருந்து வந்த 2 மோட்டார் பைக்குகளை சோதனை செய்தனர். அதில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா போன்ற போதை பொருட்கள் இருந்தது தெரிந்தது.

41 கிலோ குட்காவையும் 2 பைக்குகளையும் பறிமுதல் செய்த போலிசார், அம்பத்தூர் கல்லிக்குப்பம் பகுதியை சேர்ந்த வேழவேந்தன்(55) அவரது மனைவி வெங்கடசுப்புலு(48) கொடுங்கையூரை சேர்ந்த பரமசிவம்(62) தண்டையார்பேட்டையை சேர்ந்த மேகலா(35) ஆகியோரை கைது செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட குட்காவின் மதிப்பு ரூ1 லட்சம் என கூறப்படுகிறது. பின்னர் 4 பேரையும் ஊத்துக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். இதனால் ஊத்துக்கோட்டையில் பரபரப்பு ஏற்பட்டது.

Related posts

காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்படும் புதிய பாலப்பணியை அதிகாரிகள் ஆய்வு

போதை மாத்திரை விற்ற ரவுடி மீது குண்டாஸ்

கர்நாடகா தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய தண்ணீரை நிலுவையின்றி பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்: விவசாயிகள் கோரிக்கை