ஆந்திராவில் இருந்து தமிழகத்துக்கு பஸ்சில் 5 கிலோ கஞ்சா கடத்தி வந்த 2 பேர் கைது

வேலூர்: வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த கிறிஸ்டியான்பேட்டை சோதனைச்சாவடி அருகே நேற்று காலை 7.15 மணியளவில் வேலூர் போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவு போலீசார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சித்தூரில் இருந்து திருவண்ணாமலை நோக்கி சென்ற அரசு பஸ்சில் சோதனையிட்டபோது, சீட்டுக்கு அடியில் இருந்த 6 பார்சல்களை சோதனையிட்டனர். இதில் மொத்தம் 5 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. கஞ்சாவை கைப்பற்றிய போலீசார், அதை கடத்தி வந்த திருவண்ணாமலையை சேர்ந்த சுவேந்தர் என்ற சுகுசிவம்(35), திருக்கோவிலூர் மாவட்டம் மானாம்பூண்டியை சேர்ந்த ஆறுமுகம்(59) ஆகிய 2 பேரை மடக்கி பிடித்தனர். அவர்களிடம் விசாரித்த போது ஆந்திர மாநிலத்தில் இருந்து கஞ்சாவை மொத்தமாக வாங்கி அவர்கள் வசிக்கும் பகுதிகளில் விற்று வருவது தெரியவந்தது. இதையடுத்து வேலூர் போதை பொருள் நுண்ணறிவு பிரிவு போலீசார் 2 பேரையும் கைது செய்தனர்….

Related posts

ஒசூரில் தனியார் வங்கி ஏ.டி.எம். இயந்திரத்தை உடைத்து 14.5 லட்சம் கொள்ளை!

செய்யாறில் இன்று திருமணம் நடக்க இருந்தது காஞ்சிபுரம் சென்ற மணப்பெண் கடத்தலா?

பாமக பிரமுகருக்கு அரிவாள் வெட்டு