ஆத்தூர் அருகேதம்பதியை தாக்கிய4 பேர் கைது

ஆறுமுகநேரி, ஏப். 19: ஆத்தூர் அருகே தம்பதியை தாக்கிய வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர். ஆத்தூர் அருகேயுள்ள பழையகாயல் காமராஜபுரம் வெல்வெட் ஹவுசிங்கை சேர்ந்தவர் வீரக்குமார். இவரது மனைவி சித்திரைக்கனி(39). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கடந்த 16ம் தேதி இவர்களது மகன் பைக்கில் தனது மாமா வீட்டிற்கு சென்றுள்ளார். பின்னர் திரும்பி வரும்போது பழையகாயல் காமராஜபுரம் சந்திப்பில் அவரை வழிமறித்த இதே ஊரை சேர்ந்த ஜேம்ஸ் மகன் ஸ்டீபன்(23), ஞானராஜ் மகன் அகஸ்டின், நாகராஜ் மகன் ஜெலஸ்டின், தங்கதுரை மகன் அருள்ராஜ்(37), தனராஜ் மகன் முகேஷ் ராஜ்(23), ஜேசு அந்தோணி மகன் குணசேகரன் மற்றும் தனசேகர் ஆகிய 7 பேர் அவதூறாக பேசி கன்னத்தில் அடித்துள்ளனர். மேலும் பைக் சாவியை பிடுங்கி வைத்துக்கொண்டனர்.

இதையறிந்து தட்டிக் கேட்க சென்ற வீரக்குமார், சித்திரைக்கனியை அவதூறாக பேசி தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த வீரக்குமார், சித்திரைக்கனி மற்றும் மகன் ஆகிய 3 பேரும் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் ஆத்தூர் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் வழக்கு பதிவு செய்தார். திருச்செந்தூர் டிஎஸ்பி வசந்தராஜ் விசாரணை நடத்தி அகஸ்டின், அருள்ராஜ், முகேஷ் மற்றும் குணசேகரன் 4 பேரை கைது செய்தனர். மேலும் ஸ்டீபன், தனசேகர் மற்றும் ஜெலஸ்டின் ஆகிய 3 பேரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Related posts

சிறப்பு மக்கள் நீதிமன்றத்திற்கான காணொளி விழிப்புணர்வு பிரசார வாகனம்

அரசு கலை கல்லூரியில் மாவட்ட எஸ்பி உத்வேகம் கொரோனா தொற்றில் பெற்றோரை இழந்த குழந்தைகளுடன் கலந்தாய்வு கூட்டம்

இறப்பு பதிய பிரத்யேக மென்பொருள் பல்வேறு தோல்விக்கு பிறகு கிடைக்கும் வெற்றி தான் சிறப்பானது முயற்சி செய்தால் கிடைக்காதது எதுவும் இல்லை