Tuesday, July 2, 2024
Home » ஆத்தூர் அருகேதம்பதியை தாக்கிய4 பேர் கைது

ஆத்தூர் அருகே
தம்பதியை தாக்கிய
4 பேர் கைது

by Karthik Yash

ஆறுமுகநேரி, ஏப். 19: ஆத்தூர் அருகே தம்பதியை தாக்கிய வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர். ஆத்தூர் அருகேயுள்ள பழையகாயல் காமராஜபுரம் வெல்வெட் ஹவுசிங்கை சேர்ந்தவர் வீரக்குமார். இவரது மனைவி சித்திரைக்கனி(39). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கடந்த 16ம் தேதி இவர்களது மகன் பைக்கில் தனது மாமா வீட்டிற்கு சென்றுள்ளார். பின்னர் திரும்பி வரும்போது பழையகாயல் காமராஜபுரம் சந்திப்பில் அவரை வழிமறித்த இதே ஊரை சேர்ந்த ஜேம்ஸ் மகன் ஸ்டீபன்(23), ஞானராஜ் மகன் அகஸ்டின், நாகராஜ் மகன் ஜெலஸ்டின், தங்கதுரை மகன் அருள்ராஜ்(37), தனராஜ் மகன் முகேஷ் ராஜ்(23), ஜேசு அந்தோணி மகன் குணசேகரன் மற்றும் தனசேகர் ஆகிய 7 பேர் அவதூறாக பேசி கன்னத்தில் அடித்துள்ளனர். மேலும் பைக் சாவியை பிடுங்கி வைத்துக்கொண்டனர்.

இதையறிந்து தட்டிக் கேட்க சென்ற வீரக்குமார், சித்திரைக்கனியை அவதூறாக பேசி தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த வீரக்குமார், சித்திரைக்கனி மற்றும் மகன் ஆகிய 3 பேரும் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் ஆத்தூர் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் வழக்கு பதிவு செய்தார். திருச்செந்தூர் டிஎஸ்பி வசந்தராஜ் விசாரணை நடத்தி அகஸ்டின், அருள்ராஜ், முகேஷ் மற்றும் குணசேகரன் 4 பேரை கைது செய்தனர். மேலும் ஸ்டீபன், தனசேகர் மற்றும் ஜெலஸ்டின் ஆகிய 3 பேரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

You may also like

Leave a Comment

2 + five =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi