ஆதிநாக அருளீஸ்வரர் கோயிலில் நாளை திருக்கல்யாணம்

 

மல்லசமுத்திரம், மே 4: வையப்பமலை அடுத்த மணலி ஜேடர்பாளையத்தில் உள்ள ஆதிநாக அருளீஸ்வரர் கோயிலில், நாளை (5ம் தேதி) சுவாமிக்கு திருக்கல்யாண வைபவம் நடக்கிறது. இதனையொட்டி, நேற்று விநாயகர் கோயிலில் இருந்து சீர்வரிசை அழைத்து வரப்பட்டது. தொடர்ந்து நாளை காலை விநாயகர் வழிபாடு, புண்யாகம், பஞ்சகாவியம், கலச பூஜை மற்றும் திருக்கல்யாண வைபவம் நடைபெறுகிறது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்துள்ளனர்.

Related posts

ராஜபாளையம் காவல்துறை சார்பில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு கூட்டம்

முட்புதர்களாக காட்சியளிக்கும் அர்ச்சுனா ஆற்றை தூர்வார வேண்டும்: மார்க்சிஸ்ட் கட்சி கோரிக்கை

வெம்பக்கோட்டை அருகே ஆக்கிரமிப்புகள் அகற்றம்