ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு வேலைவாய்ப்புடன் தொழில்துறை சார்ந்த திறன் மேம்பாட்டு பயிற்சி: சென்னை கலெக்டர் தகவல்

 

சென்னை, ஜன.8: ஆதிதிராவிடர், பழங்குடியினத்தை சேர்ந்தவர்களுக்கு வேலைவாய்ப்புடன் தொழில் துறை சார்ந்த தானியங்கி திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்பட உள்ளதாக சென்னை கலெக்டர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சென்னை மாவட்ட கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்ட அறிவிப்பு: தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் (தாட்கோ), ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினத்தை சேர்ந்தவர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சிகளை வழங்கி வருகிறது.

அதன் அடிப்படையில் மெக்கானிக்கல் புரொடக்ஷன் டெக்னாலஜி, எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக் பட்டயப் படிப்பு, பொறியியல் பட்டப்படிப்பு முடித்த மேற்கண்ட சமூகத்தினருக்கு தொழில்துறை சார்ந்த தானியங்கி திறன் மேம்பாட்டு பயிற்சி மற்றும் எண்முறை உற்பத்தி துறையில் திறன் மேம்பாட்டு பயிற்சி (NTTF) நிறுவனத்தின் மூலம் வழங்கவும், புகழ்பெற்ற தனியார் தொழிற்சாலைகளில் வேலை வாய்ப்பு பெற்றுதரவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

மெக்கானிக்கல் புரொடக்ஷன் டெக்னாலஜி, எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக் பட்டயப்படிப்பு, பொறியியல் பட்டப்படிப்பு முடித்த 18 வயது முதல் 26 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இப்பயிற்சிக்கான கால அளவு 6 மாதம். தங்கி படிக்கும் வசதியும் உண்டு. இப்பயிற்சியை முழுமையாக முடிக்கும் மாணவர்களுக்கு தேசிய திறன் மேம்பாட்டு நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட தரச் சான்றிதழ் வழங்கப்படும். இதற்கு www.tahdco.com என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். பயிற்சிக்கான கட்டணம் தாட்கோ வழங்கும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை