நாகப்பட்டினம்: உணவக தொழில் தொடங்கும் திட்டத்தில் பயன்பெற ஆதிதிராவிடர், பழங்குடியினத்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று நாகப்பட்டினம் மாவட்ட கலெக்டர் அழைப்பு விடுத்துள்ளார். இதுகுறித்து நாகப்பட்டினம் மாவட்ட கலெக்டர் ஜானிடாம்வர்கீஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின தொழில் முனைவோர்களின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்த நடமாடும் ஊர்தியில் உணவக தொழில் தொடங்கும் திட்டம் உருவாக்கப்படவுள்ளது. இதற்கான தகுதிகள் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தை சார்ந்தவராக இருக்க வேண்டும்.