செய்துங்கநல்லூர், செப் .24: ஆதிச்சநல்லூர் சைட் மியூசியத்தில் ஒன்றிய தொல்லியல் துறையும், வைகுண்டம் கேஜிஎஸ் பள்ளி என்சிசி மாணவர்களும் இணைந்து தூய்மை பணி மேற்கொண்டனர். சைட் பொறுப்பாளர் சங்கர் தலைமை வகித்தார். பணியை தொல்லியல் ஆய்வாளர் எத்தீஸ்குமார் துவக்கி வைத்தார். கேஜிஎஸ் பள்ளி என்சிசி மாணவர்கள், ஏ,பி.சி என 3 சைட்டுகளிலும் தேவையில்லாத முட்புதர் மற்றும் பார்வையாளர்கள் போட்டு சென்ற குப்பைகளை அகற்றி தூய்மை பணியை மேற்கொண்டனர். இதில் நல்லாசிரியர் சிவகளை மாணிக்கம், மியூசிய பணியாளர்கள் வெங்கடேஷ், அந்தோணி, என்சிசி மாணவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.