கந்தர்வகோட்டை: ஆதனக்கோட்டை பகுதிகளில் அறுவடை செய்யும் சோளம் கோழி பண்ணைக்கு விநியோகிப்படுகிறது என்று விவசாயிகள் தெரிவிக்கின்றனர். புதுக்கோட்டை மாவட்டம் புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் ஆதனக்கோட்டை பகுதிகளில் விவசாயிகள் பயிர் செய்திருந்த சோள பயிர்கள் நன்கு விளைந்து தற்சமயம் மகசூல் எடுத்து வருகின்றனர். வயல்களில் வினைத்து இருந்த சோளக் கதிர்களை இயந்திரங்களைக் கொண்டு பிரித்தெடுத்து தற்சமயம் காய வைத்து வருகிறார்கள். விவசாயிகளிடம் பேசியபோது, சோளத்தை பொருத்தவரை விற்பனையில் எந்த ஒரு கஷ்டமும் இல்லை. சோளத்தை பக்குவமாக காய வைத்து விட்டன் வியாபாரிகள் சம்பந்தப்பட்ட இடத்திற்கே வந்து எடை போட்டுக்கொண்டு சோளத்திற்கு உரிய தொகையை கொடுத்து விடுகிறார்கள். வியாபாரிகள் கொள்முதல் செய்யும் சோளம் கோழிப்பண்ணைக்கு நேரடியாக சென்று விடுகிறது என்று விவசாயிகள் கூறுகிறார்கள். விவசாயிகள் கூறும்போது குறிகிய காலத்தில் நிறைந்த லாபம் தரக்கூடிய பயிர்களில் சோளமும் ஒன்று என்று விவசாயிகள் தெரிவிக்கிறார்கள்….