Thursday, July 4, 2024
Home » ஆண் நண்பரின் உதவியுடன் கவரிங் நகையை அடகு வைத்து ரூ.1.50 லட்சம் மோசடி: துணை நடிகைக்கு போலீஸ் வலை

ஆண் நண்பரின் உதவியுடன் கவரிங் நகையை அடகு வைத்து ரூ.1.50 லட்சம் மோசடி: துணை நடிகைக்கு போலீஸ் வலை

by kannappan

சென்னை: வடபழனி நெற்குன்றம் பாதையை சேர்ந்தவர் ரமேஷ்(30). துணை நடிகராக உள்ளார். இவர் துணை நடிகையான சலோமியா(26) என்பவருடன் பழகி வந்துள்ளார். இந்த பழக்கத்தால் சலோமியா கடந்த மாதம் 17ம் தேதி ரமேஷை தொடர்பு கொண்டு ‘எனது பாட்டிக்கு உடல் நிலை சரியில்லை. இதனால் அவசரமாக ரூ.1.50 லட்சம் தேவைப்படுகிறது’ என்று கூறியுள்ளார். அதற்காக சலோமியா தனது 5 சவரன் நகையை ரமேஷின் பெயரில் அடகுவைத்து கொடுக்கும்படி அவரிடம் கூறியுள்ளார். சக துணை நடிகை என்பதால் ரமேஷ் அதற்கு ஒப்புக்கொண்டுள்ளார்.அதன்படி இருவரும் சாலிகிராமம் தசரதபுரம் பகுதியில் உள்ள அடகு கடைக்கு சென்று 5 சவரன் மதிப்புள்ள ஒரு வளையல், ஒரு செயின் நகையை கடையில் உள்ள உரிமையாளர் உக்தம் சந்த் என்பவரிடம் கொடுத்து ரமேஷ் பெயரில் அடகு வைத்தனர். பின்னர் ரூ.1.50 லட்சத்தை பெற்று சலோமியாவிடம் கொடுத்துள்ளார். பின்னர் அடகுக்கடைக்காரர் நகையை பரிசோதனை செய்தபோது சலோமியா கொடுத்த 5 சவரன் கவரிங் நகை என தெரியவந்தது. இதுகுறித்து துணை நடிகர் ரமேஷிடம் அடகுக்கடைக்காரர் தகவல் தெரிவித்தார். அதை கேட்டு  அதிர்ச்சியடைந்த ரமேஷ் சலோமியாவுக்கு போன் செய்துள்ளார். ஆனால் அவரின் போன் சுவிட்ச்ஆப் செய்யப்பட்டிருந்தது. மேலும் சலோமியா வீட்டில் இருந்து மாயமானதும் தெரியவந்தது. புகாரின்படி விருகம்பாக்கம் போலீசார் சைபர் க்ரைம் போலீசார் உதவியுடன் தேடி வருகின்றனர். * திருப்பி தருவதாக உறுதிபோலீசார்  துணை நடிகை சலோமியாவை தொடர்பு கொண்டு விசாரித்தனர். அதற்கு அவர், இரண்டு நாட்களில் ரூ.1.50 லட்சம் கொண்டு வந்த கொடுத்து விடுவதாக உறுதி அளித்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். பணத்தை கொண்டு வரவில்லை என்றால் துணை நடிகை சலோமியாவை கைது செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்….

You may also like

Leave a Comment

16 − fifteen =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi