ஆண்டிபட்டி அருகே தற்கொலை செய்த பெண் உடலை வாங்க மறுப்பு-உறவினர்கள் சாலை மறியல்

ஆண்டிப்பட்டி : ஆண்டிபட்டி அருகே, தற்கொலை செய்து கொண்ட பெண்ணின் சாவில் மர்மம் இருப்பதாக கூறி உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.ஆண்டிபட்டி அருகே டி.சுப்புலாபுரத்தை சேர்ந்தவர் முத்துப்பாண்டி. இவரது மனைவி முத்துலட்சுமி (29). இவர்களுக்கு 7 வயதில் பெண் குழந்தையும், 5 வயதில் ஆண் குழந்தையும் உள்ளனர். குடும்பப் பிரச்சினையால் கணவன், மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் மனம் வெறுத்த முத்துலட்சுமி நேற்று வீட்டில் தூக்கு போட்டு தற்கொலைக்கு முயன்றார். இதனை கண்ட அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி முத்துலட்சுமி பரிதாபமாக உயிரிழந்தார்.இதற்கிடையே முத்துலட்சுமி சாவில் மர்மம் உள்ளதாகவும், இறப்பிற்கு காரணமாக இருந்தவர்களை கைது செய்ய வேண்டும் என்றும் கூறி அவரது உறவினர்கள் தேனி அரசு மருத்துக் கல்லூரி மருத்துவமனைக்கு வெளியே தேனி – மதுரை சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது முத்துப்பாண்டியிடம் உரிய விசாரணை நடத்தப்படும் என்று போலீசார் உறுதி அளித்த நிலையில் உறவினர்கள் மறியலை கைவிட்டனர். இந்த சம்பவம் குறித்து ஆண்டிபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து முத்துபாண்டியிடம் விசாரித்து வருகின்றனர்….

Related posts

ரூ.4 கோடி பறிமுதல் வழக்கு பாஜக பொருளாளர் ஆஜராக ஆணை

வரதட்சணை கொடுமை வழக்கில் 7 ஆண்டு சிறை..!!

டாஸ்மாக் கடைகளில் காலி மது பாட்டில்களை திரும்ப பெறும் திட்டம் தமிழகம் முழுவதும் செப்டம்பர் மாதம் அமல்