ஆண்டாள் கோயில் யானை குளிக்க புதிதாக நீச்சல் குளம்: ரூ.11 லட்சம் செலவில் அமைப்பு

திருவில்லிபுத்தூர்: திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் யானைக்கு ரூ.11 லட்சம் செலவில் புதிய நீச்சல் குளம் அமைக்கப்பட்டுள்ளது. இதில், யானை குஷியாக குளித்து மகிழ்கிறது. விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூரில் பிரசித்தி பெற்ற ஆண்டாள் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஜெயமால்யதா என்னும் 19 வயது யானை உள்ளது. இது குளித்து மகிழ ரூ.11 லட்சம் செலவில் புதிய நீச்சல் குளம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நீச்சல் குளத்தில் யானை ஜெயமால்யதா தினசரி குளித்து மகிழ்கிறது. குளத்தில் யானை இறங்கியவுடன் அங்கும், இங்கும் ஆர்வமாக செல்கிறது. யானை பாகன்கள் கூறுகையில், ‘‘புதிதாக அமைக்கப்பட்ட நீச்சல் குளத்தில் யானை தினசரி குளித்து மகிழ்கிறது. குளத்தில் இறங்கியவுடன் சிறு குழந்தை போல அங்கும், இங்கும் சென்று தண்ணீரை துதிக்கையால் வாரி இரைத்து மகிழ்ச்சியுடன் விளையாடுகிறது’’ என்றனர். …

Related posts

ஆம்ஸ்ட்ராங் படுகொலை அதிர்ச்சி அளிக்கிறது: தவெக தலைவர் விஜய்

திருச்சி மாவட்டம் பாடாலூர் அருகே இன்று அதிகாலை விபத்து: காரில் பயணித்த பெண் பலி

திருக்கோவிலூர் அருகே மின்சார டிரான்ஸ்பார்மர் வெடித்து பயங்கர தீ விபத்து