ஆணவ கொலை புகார் விவகாரம் போலீசாரை பணி நீக்கம் செய்ய கேட்டு விசிகவினர் ஆர்ப்பாட்டம்

 

பல்லடம், ஜன.14: ஆணவ கொலை புகார் விவகாரத்தில், பல்லடம் போலீசாரை பணி நீக்கம் செய்யுமாறு கேட்டு விசிகவினர் பல்லடத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். பட்டுக்கோட்டையை சேர்ந்தவர் நவீன் (19). இவரும் அதே பகுதியை சேர்ந்த 19 வயது பெண்ணும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள். இவர்கள் இருவரும் காதலித்துள்ளனர். இந்நிலையில் கடந்த 31-ம் தேதி நண்பர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது. இதனை செல்போனில் வீடியோ எடுத்து நண்பர்களுக்குள் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளனர்.

இந்த தகவல் இளம்பெண்ணின் பெற்றோருக்கும் சென்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அவரின் பெற்றோர், தனது மகளை காணவில்லை என சொல்லிபல்லடம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில், திருமண ஜோடியை அழைத்து விசாரணை செய்த போலீசார், இருவரையும் பிரித்து பெற்றோருடன் மகளை அனுப்பியதாக கூறப்படுகிறது. ஊருக்கு சென்றவுடன் மகளை, பெற்றோரே ஆணவ கொலை செய்ததாக புகார் எழுந்தது.

இதுகுறித்து நவீன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இதற்கிடையில், பல்லடம் போலீசார் இந்த வழக்கை முறையாக விசாரிக்கவில்லை எனக்கூறி போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகையன் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டார். இந்நிலையில் இந்த சம்பவத்தில் தொடர்புடைய போலீசாரையும் பணி நீக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி நேற்று பல்லடம் போலீஸ் நிலையம் முன்பு விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Related posts

சிறப்பு மக்கள் நீதிமன்றத்திற்கான காணொளி விழிப்புணர்வு பிரசார வாகனம்

அரசு கலை கல்லூரியில் மாவட்ட எஸ்பி உத்வேகம் கொரோனா தொற்றில் பெற்றோரை இழந்த குழந்தைகளுடன் கலந்தாய்வு கூட்டம்

இறப்பு பதிய பிரத்யேக மென்பொருள் பல்வேறு தோல்விக்கு பிறகு கிடைக்கும் வெற்றி தான் சிறப்பானது முயற்சி செய்தால் கிடைக்காதது எதுவும் இல்லை