ஆட்டோ ஸ்டாண்டை பூந்தோட்டமாக மாற்றும் ஓட்டுனர்கள்

பந்தலூர், ஆக.3: பந்தலூர் அருகே உள்ள எருமாடு ஆட்டோ நிறுத்தம் பகுதியில் ஆட்டோ ஓட்டுனர்கள் பூச்செடிகளை நீண்ட வரிசையில் வைத்து பராமரித்து வருவது சுற்றுலா பயணிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. நீலகிரி மாவட்டம், பந்தலூர் வட்டம் சேரங்கோடு ஊராட்சிக்குட்பட்ட எருமாடு பகுதியில் 50க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் இயங்கி வருகின்றன. இதன் ஆட்டோ ஓட்டுநர்கள் பஜார் பகுதியில் ஆட்டோ ஸ்டாண்ட் அமைத்துள்ளனர். இவர்கள் தங்கள் ஆட்டோ ஸ்டாண்டில் ஏராளமான பூச்செடிகளை தொட்டிகளில் நீண்ட வரிசையில் வைத்துள்ளனர். அதனை முறையாக நீர் ஊற்றியும் பராமரித்து வருகின்றனர். ஆட்டோ ஓட்டுனர்களின் இந்த செயல்பாடு எருமாடு பகுதிக்கு வரும் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.

Related posts

ஆசிரியர்கள் கலந்தாய்வுக்கு எதிராக நடத்தும் போராட்டத்தில் பங்கேற்க மாட்டோம் பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு அறிவிப்பு

கஞ்சா விற்றவர் கைது

முப்பெரும் சட்டங்களை அமல்படுத்த எதிர்ப்பு திருச்சியில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்