ஆட்டோ மீது மோதிய அரசு பஸ் 45 பயணிகள் உயிர் தப்பினர்

 

ராமநாதபுரம், ஜூன் 12: ராமநாதபுரம் அருகே ஆட்டோ மற்றும் மின் கம்பத்தின் மீது அரசு பஸ் மோதிய விபத்தில் ஆட்டோ டிரைவர் உட்பட 45 பயணிகள் உயிர்தப்பினர். ராமநாதபுரம் அரண்மனையில் இருந்து அரசு டவுன் பஸ் ஒன்று நேற்று முன்தினம் ஆற்றங்கரை வழியாக பனைக்குளம் நோக்கி சென்றது. இந்த பஸ்ஸில் 45 பயணிகள் சென்றனர். ராமநாதபுரம் அருகே நதி பாலம் வளைவில் பஸ் வந்தபோது, அந்த பகுதியில் எதிரே ஆட்டோ ஒன்று வந்தது. எதிரே பஸ் வருவது கண்ட ஆட்டோ டிரைவர் கீழே குதித்தார்.

கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ பஸ்ஸின் அடியில் சென்று அப்பளமாக நொறுங்கியது. இந்த விபத்தின் போது பஸ் எதிரிலிருந்த மின் கம்பத்தின் மீது மோதியதால் மின்கம்பம் முறிந்து மின் கம்பிகளும் பஸ் மீது அறுந்து விழுந்தது. அந்த நேரத்தில் மின்விநியோகம் இல்லாததால் பெரும் விபத்து ஏற்படாமல் தடுக்கப்பட்டது. பஸ்ஸில் இருந்த 45 பயணிகளும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இந்த விபத்து குறித்து தேவிப்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து வருகின்றனர். மேலும் இப்பகுதியில் அடிக்கடி விபத்து நடப்பதால், இச்சாலையில் வேகத்தடை அமைக்க வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related posts

தி.நகர் சட்டமன்ற தொகுதியில் குடிநீர் பிரச்னைக்கு விரைவில் தீர்வு: ஜெ.கருணாநிதி எம்எல்ஏ கேள்விக்கு அமைச்சர் கே.என்.நேரு பதில்

தனிநபருக்கு எத்தனை பாட்டில் விற்கலாம்? மது விற்பனைக்கு விதிமுறை பணியாளர்கள் கோரிக்கை

இன்று காலை 6-9 மணி வரை அண்ணாநகர் பகுதியில் போக்குவரத்து மாற்றம்: காவல் துறை அறிவிப்பு