Sunday, October 6, 2024
Home » ஆட்டோ திருடியவர் கைது

ஆட்டோ திருடியவர் கைது

by Karthik Yash

சங்கரன்கோவில், ஜூலை 9: சங்கரன்கோவிலில் ஆட்டோ திருடியவரை போலீசார் கைது செய்தனர். சங்கரன்கோவில் பாரதியார் நகர் 3வது தெருவை சேர்ந்த ராமகிருஷ்ணன் மகன் தட்சிணாமூர்த்தி (45). இவர் சொந்தமாக ஆட்டோ வைத்து ஓட்டி வருகின்றார். கடந்த 6ம் தேதி இரவு வீட்டின் முன்பு ஆட்டோவை நிறுத்திவிட்டுச் தூங்க சென்றார். இந்நிலையில் நள்ளிரவு 12 மணியளவில் மர்ம நபர் அவரது ஆட்டோவை திருடிச் சென்றார். இது குறித்து தட்சிணாமூர்த்தி சங்கரன்கோவில் டவுன் போலீசில் அளித்தார். அதன்பேரில் சங்கரன்கோவில் டிஎஸ்பி சுதீர் தலைமையில் 5 பேர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் ஆட்டோ திருடு போன பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர்.

அதில் பதிவான உருவத்தை அடிப்படையாக கொண்டு ஆட்டோ திருடிய நபரை தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் சங்கரன்கோவில் டவுன் போலீசார் கரிவலம்வந்தநல்லூர் பகுதியில் தேடுதல் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கரிவலம்வந்தநல்லூர் அருகே திருடிய ஆட்டோவை ஓட்டி வந்த ராஜபாளையத்தைச் சேர்ந்த பூலியூர் சாமி மகன் சங்கிலி காளை (33) என்பவரை போலீசார் கைது செய்து ஆட்டோவை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட சங்கிலிக்காளை மீது பல்வேறு திருட்டு, கொள்ளை வழக்குகள் உள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.போலீசார் நேற்று அவரை கைது செய்தனர்.

You may also like

Leave a Comment

sixteen − 1 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi