ஆட்டோ டிரைவரிடம் செல்போன் பறித்த 2 பேர் கைது

ஈரோடு, ஜூலை 30: பெருந்துறை கருமாண்டிசெல்லிபாளையத்தை சேர்ந்தவர் பழனிசாமி. இவரது மகன் தாமோதரன்(23). இவர் சொந்தமாக ஆட்டோ வைத்து ஓட்டி வருகின்றார். இந்நிலையில் நேற்று முன்தினம் மதியம் சவாரி ஒன்றிக்காக பெருந்துறை மடத்துப்பாளையம் பிரிவு அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையோரத்தில் நின்ற 2 பேர் ஆட்டோவை கை காட்டி நிறுத்தி உள்ளனர். பின்னர் வாடகை பற்றி பேச்சுக் கொடுத்துக்கொண்டிருந்த அந்த 2 நபர்களும் திடீரென்று ஆட்டோவில் தாமோதரன் வைத்திருந்த 2 செல்போன்களை திருடிக்கொண்டு தப்பியோடினர். இதையடுத்து தாமோதரன் சத்தம் போடவே அருகில் இருந்த பொதுமக்களின் உதவியோடு தப்பியோடிய இருவரையும் மடக்கி பிடித்து பெருந்துறை போலீசில் ஒப்படைத்தார். விசாரணையில் பிடிபட்டவர்கள் சித்தோடு சாணார்பாளையம் மாணிக்கம் மகன் சபரீஷ்(25), திருப்பூர் லட்சுமிநகரை சேர்ந்த சம்பத்குமார் (37) என்பது தெரியவந்தது. இதையடுத்து வழக்கு பதிந்த பெருந்துறை போலீசார் இருவரையும் கைது செய்தனர்.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை