திருச்சி: திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி அருகே உள்ள எம்.இடையபட்டியில் வசித்து வருபவர் செல்வம்(40). இவர், வளர்த்து வரும் ஆடுகளை அருகில் உள்ள காட்டுப் பகுதியில் நேற்று மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது ஆட்டுக்குட்டி அலறும் சத்தம் கேட்டு ஓடிவந்து பார்த்தபோது, 12 அடி நீளம் கொண்ட மலைப்பாம்பு ஆட்டுக்குட்டியை விழுங்கிக் கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.தகவலறிந்து வந்த துவரங்குறிச்சி தீயணைப்புத் துறையினர் மலைப்பாம்பினை லாவகமாக பிடித்து அருகில் உள்ள வனப்பகுதியில் கொண்டு சென்று விட்டனர்….