வேதாரண்யம்: ஆட்கள் பற்றாக்குறையால் கோவிபத்து நெல் சேமிப்பு கிடங்கில் லாரிகளில் இருந்து நெல் மூட்டைகள் இறக்கப்படாமல் 3 நாட்களாக லாரிகள் காத்துக்கிடக்கிறது. நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கோவில்பத்து பகுதியில் ஆசியாவிலேயே இரண்டாவது மிகப்பெரிய நெல் சேமிப்பு கிடங்கு உள்ளது. இந்த நெல் சேமிப்பு கிடங்கில் விவசாயிகளிடம் இருந்து சென்ற ஆண்டு கொள்முதல் செய்யபட்ட நெல் சுமார் 10,000 டன் நெல் மூட்டைகள் வெட்ட வெளியில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது நாகை மாவட்டத்தில் குறுவை அறுவடை பணிகள் நடைபெற்று நெல் கொள்முதல் செய்யபட்டு நாள்தோறும் 97 நேரடி கொள்முதல் நிலையத்தில் இருந்து 50க்கும் மேற்பட்ட லாரிகளில் சேமிப்பு கிடங்கிற்கு நெல் கொண்டு வரப்படுகிறது இதனை இறக்கி அடுக்கி வைப்பதற்கு போதுமான ஊழியர்கள் இல்லாததால் சேமிப்பு கிடங்குகளில் நூற்றுக்கும் மேற்பட்ட லாரிகள் 3 நாட்களாக காத்துக் கிடக்கிறது. இதனால் லாரி டிரைவர்கள் மற்றும் உரிமையாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே உடனடியாக கூடுதலாக ஆட்களை கொண்டு லாரிகளிலே உள்ள நெல்மூட்டைகளை இறக்க வேண்டும் என லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் கேட்டுக்கொண்டுள்ளனர்….