ஆடு வாங்கி தந்தவருக்கு அடி

சிவகாசி, ஜூன் 14: சிவகாசி அருகே திருத்தங்கல் இந்திரா நகரை சேர்ந்தவர் சேது(72). ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு ஆடுகள் வாங்கிக் கொடுத்த வகையில், செங்கமல நாச்சியார்புரத்தை சேர்ந்த சுரேஷ் என்பவர் சேதுவிற்கு ரூ.55 ஆயிரம் தரவேண்டியதாக கூறப்படுகிறது. அவர் பணம் தராததால் போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுக்கப்பட்டது. இதன்பிறகு ரூ.20 ஆயிரம் மட்டும் சுரேஷ் கொடுத்தார். மீதி பணத்தை சேது, அவரது மனைவி காளீஸ்வரி(65) கேட்டுள்ளனர். அதற்கு சுரேஷ் இருவரையும் தகாத வார்த்தை பேசி கம்பு கல்லால் அடித்து கொலை மிரட்டல் விடுத்தார். இது குறித்து திருத்தங்கல் போலீசார் விசாரிக்கின்றனர்.

Related posts

ஆசிரியர்கள் கலந்தாய்வுக்கு எதிராக நடத்தும் போராட்டத்தில் பங்கேற்க மாட்டோம் பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு அறிவிப்பு

கஞ்சா விற்றவர் கைது

முப்பெரும் சட்டங்களை அமல்படுத்த எதிர்ப்பு திருச்சியில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்