ஆடு திருடர்களுக்கு வலை

 

திருச்சுழி, ஜூன் 17: திருச்சுழி அருகே ஆட்டு குட்டியை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். திருச்சுழி அருகே உள்ள தச்சநேந்தலை சேர்ந்தவர் தெய்வேந்திரன்(53). இவர் விவசாயம் செய்து வருகிறார். மேலும் வீட்டில் ஆடுகள் வளர்த்து வருகிறார். திருவிழாவை முன்னிட்டு கலை நிகழ்ச்சிகள் காண சென்றபோது வீட்டில் கட்டி வைத்திருந்த ஆட்டை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். அருகில் உள்ள ஆட்டு மந்தைகளில் தேடியும் கிடைக்காததால் அ. முக்குளம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Related posts

பேனர் வைத்தவர்கள் மீது வழக்கு

மணல் சிற்பத்தில் புதுவை; ஆயி மண்டபம், முதல்வர் முகம்

பெண்ணிடம் கந்துவட்டி கொடுமை வீட்டை பூட்டி வெளியேற்றிய அவலம்