ஆடுகளை திருடியவர்களுக்கு போலீஸ் வலை

தேனி, ஆக. 10: தேனி அருகே மாணிக்காபுரத்தில் வீட்டில் அடைத்து வைத்திருந்த 5 ஆடுகளை இரவு நேரத்தில் திருடிச் சென்றவர்கள் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தேனி அருகே மாணிக்காபுரத்தில் வடக்குத் தெருவில் குடியிருப்பவர் முனியப்பன் மகன் ராஜா(47). இவர் ஆடுகளை வளர்த்து விற்பனை செய்யும் தொழில் நடத்தி வருகிறார். கடந்த புதன்கிழமை இரவு வீட்டின் முன்பாக உள்ள கொட்டகையில் ஆடுகளை அடைத்து விட்டு வீட்டிற்கு சென்று தூங்கினார். காலையில் எழுந்து பார்த்தபோது, 5 ஆடுகளும் காணவில்லை. அக்கம், பக்கம் தேடிப்பார்த்தும் ஆடு கிடைக்காததால் வீரபாண்டி போலீசில் ராஜா புகார் அளித்தார். இரவு நேரத்தில் கொட்டகைக்குள் புகுந்து ஆடுகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

பேனர் வைத்தவர்கள் மீது வழக்கு

மணல் சிற்பத்தில் புதுவை; ஆயி மண்டபம், முதல்வர் முகம்

பெண்ணிடம் கந்துவட்டி கொடுமை வீட்டை பூட்டி வெளியேற்றிய அவலம்