ஆசிரியர் சாதனை பெரம்பலூர் அருகே பைக் மீது லாரி மோதல் 3 வாலிபர்கள் பரிதாப பலி

பாடாலூர்: பெரம்பலூர் அருகே பைக் மீது டேங்கர் லாரி மோதிய விபத்தில் 3 வாலிபர்கள் பலியாயினர். திருச்சி மாவட்டம் துறையூர் தாலுகா கோட்டாத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் சஞ்சீவி மகன் வினோத் (19), ராஜூ மகன் ராம் (20), செல்வராஜ் மகன் ஆனந்த் (22). நண்பர்களான இவர்கள் 3 பேரும் கடந்த 22ம் தேதி இரவு பைக்கில் ஆலத்தூர் தாலுகா நக்கசேலம் அருகே சென்று கொண்டிருந்தனர். அப்போது பெரம்பலூரில் இருந்து துறையூர் நோக்கி சென்ற டேங்கர் லாரி பைக் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த வினோத், ராம் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்த ஆனந்த் துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இது குறித்து பாடாலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

ஒட்டன்சத்திரத்தில் விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல் மாவட்ட மக்கள் வருவாய் துறை கோரிக்கை மனுக்களுக்கு என்னென்ன ஆவணங்கள் அளிக்க வேண்டும்: கலெக்டர் விளக்கம்

பாலமரத்துப்பட்டியில் இன்று ‘பவர் கட்’