ஆசிரியர்களை நியமிக்க கோரி பெற்றோர்-மாணவர்கள் மறியல்

மங்கலம்பேட்டை, ஜூன் 28: கடலூர் மாவட்டம் மங்கலம்பேட்டை அருகே உள்ள மு.பட்டி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் ஆசிரியர்கள் பற்றாக்குறை இருந்து வருவதாகவும், ஆசிரியர்களை நியமனம் செய்ய வேண்டும் என்றும் பொதுமக்கள் தொடர்ந்து அரசுக்கு கோரிக்கை வைத்து வந்தனர். இந்த நிலையில், இப்பள்ளியில் படிக்கும் மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் நேற்று விருத்தாசலம்-மங்கலம்பேட்டை சாலையில் திடீரென மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக வந்த விருத்தாசலம் டிஎஸ்பி ஆரோக்கியராஜ் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதியளித்ததன் பேரில், பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் தங்களது போராட்டத்தைக் கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனையடுத்து, மாணவர்கள் பள்ளிக்குச் சென்றனர்.

Related posts

சிறப்பு மக்கள் நீதிமன்றத்திற்கான காணொளி விழிப்புணர்வு பிரசார வாகனம்

அரசு கலை கல்லூரியில் மாவட்ட எஸ்பி உத்வேகம் கொரோனா தொற்றில் பெற்றோரை இழந்த குழந்தைகளுடன் கலந்தாய்வு கூட்டம்

இறப்பு பதிய பிரத்யேக மென்பொருள் பல்வேறு தோல்விக்கு பிறகு கிடைக்கும் வெற்றி தான் சிறப்பானது முயற்சி செய்தால் கிடைக்காதது எதுவும் இல்லை